புதன், 3 பிப்ரவரி, 2010

மரண அறிவித்தல்!!! (அமரர் மு.முத்துக்குமார் -புங்குடுதீவு)

muttukumarukunchiதிரு.முருகேசு முத்துக்குமார் (பிறப்பு : 25 சனவரி 1934 — இறப்பு : 2 பெப்ரவரி 2010) புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு முத்துக்குமார் அவர்கள் 02.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், தில்லைஈசன்(ஜேர்மனி), உதயமலர், விஜயமலர்(இலண்டன்) ஆகியோரின் தந்தையாரும், தர்மராசா, வரதராசன்(இலண்டன்), சந்திரகாந்தி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்லத்துரை(இலண்டன்), காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், சின்னத்தம்பி மற்றும் ராமலிங்கம்(முன்னாள் யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலய அதிபர், டென்மார்க்), காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் சகோதரனும்,

தர்மலிங்கம், இரத்தினம், யோகலிங்கம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்

திவ்வியா, சதுர்யா(ஜேர்மனி), லவ்சியா, சுவிதா(இலண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஈசன்(ஜேர்மனி)
தொடர்புகளுக்கு
வரதராசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086449310
ஈசன் — ஜெர்மனி
தொலைபேசி: +497115781152
தர்மராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442086402859

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்..!!! (வைத்திலிங்கம் நவரட்ணம்) 31/12/2009

உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நவரட்ணம் 31.12.09 இன்று காலமானார். (மலர்வு -30.01.1929. உதிர்வு -31.12.2009.) காலமானார். இவர் காலஞ் சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற சின்னத்தரை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும். தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். காலம் சென்ற ராசநாயகம், செல்வநாயகம்-இலங்கை, பாஸ்கரன் -ஜேர்மனி, மனோகரன் - ஜேர்மனி, நவசீலன்-ஜேர்மனி, உ.நாகேஸ்வரி-இலங்கை, நாகேஸ்வரன்-ஜேர்மனி, சி.நந்திரா-இலங்கை, வி.பிரபாலினி-ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தந்தையும். கணவதிபிள்ளை, நகுலவதி, மதியாபரணம், மகாராஜா, லீலாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும், DR.பரம்சோதிநாதரின் மைத்துனரும் ஆவார் ரா.விஜயகுமாரி, செ.மங்களேஸ்வரி - இலங்கை பா.ராகினி, ம.யோகேஸ்வரி (உமா ), ந.ஜெயகலா, நா.றஜனி, விக்ணேஸ்வரன் ஜேர்மனி, உதயகுமார், சிறீஸ்குமார் இலங்கை இவர்களின் அன்பு மாமனாரும் ராஜ்குமார், ரஜீவன், விஜித்தா, சுகிர்தா, அருள்செல்வி, அருள்மதி, அருள்நிதி, மேகலா, சயந்தன், சயந்தினி, தனராஜ், லேகன், தர்சிகா, காண்டீபன், உசாந்தினி, கிரிசாந்தினி, சுபாஜினி, கோவிந்தன் -இலங்கை, திணேஸ், ராகுலன், வேணுகா, டர்சிகா, வீஸ்மன், விதுஷா, கௌசிகன், நவநீதன், நிதுஜா, நிம்ஜா, நிர்மலன், சகிதா, சஜின்,விதுசன், வீவிதன் -Germany ஆகியோரின் அன்பு பேரனும் நகிர்த்தனா, திசானன், நிசேதனன்அவர்களின் புட்டனும் ஆவர்.. அன்னாரின். இறுதிக்கிரிகை பின்னர் அறிவக்கப்படும்.தொடர்புகளுக்கு..
பாஸ்கரன்-ஜேர்மனி .0049/07266.௯௧௮௯௪௧

மனோகரன்.ஜேர்மனி 0049/07136.௮௫௯௯

நவசீலன் .ஜேர்மனி 0049/07136 ௯௯௧௮௩௩

நாகேஸ்வரன் .ஜேர்மனி0049/07136.991680.

பிரபாலினி விக்கி ஜேர்மனி 0049/05371150548 .

சனி, 9 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்!! திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வல்வெட்டித்துறை)

velupillai2001504வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய காணி உத்தியோகத்தரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேங்கடம் பருவதவர்தனி தம்பதியரின் மகனும் திருமதி. பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், திரு. மனோகரன் (டென்மார்க்), திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. வினோதினி இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற திரு.பிரபாகரன் (தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (09.01.2010)சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்ஷலிக்காக வைக்கப்பட்டு, நாளை (10.01.2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். தகவல்: வல்வை மக்கள் ஒன்றியம்

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மரண அறிவித்தல்.. நாகமணி அரிச்சுணராசா

நாகமணி அரிச்சுணராசா (மாரீசன்கூடல், இளவாலை) தோற்றம்: 29.101951 மறைவு:29.12.௨00௯ யாழ்ப்பாணம் மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும்,, முல்லைத்தீவு உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நாகமணி அரிச்சுணராசா அவர்கள் 29.12.2009 செவ்வாய்கிழமை அன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார். அன்னார் நாகமணி மீனாட்சியின் அன்பு புதல்வனும் சச்சிதானந்தம் (போத்தார்), அரிராசசிங்கம் (ராசு கனடா) அவர்களின் அன்பு சகோதரனும். நிர்மாலதேவியின் அன்புகணவரும், விமலராஜன் (கண்ணன் கனடா), கேசவராஜன் (பாடி பரீஸ்), கோவிந்தராஜன் (கோபி சவுதி), ஜீவராஜன் (ஜீவா இலங்கை), கனிதா (பரீஸ்), ஜெயராஜன் (தீபன் சவுதி), மகராஜன் (விஜய் பாரீஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவர். அன்னாரின் தகனக்கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும், இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.. -
தகவல் குடும்பத்தினர்தொடர்புகட்கு: மனைவி- 01194652225711

மகன் பாபு-0331-53284365

செவ்வாய், 10 நவம்பர், 2009

புளொட் பிரான்ஸ்கிளை அமைப்பாளர் தோழர்பிரபாவின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்..!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான தோழர்.பிரபா அவர்கள், 30.10.2009 அன்று அகால மரணமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் ராஐமனோகரன் பரமேஸ்வரி ஆகியோரின் புதல்வரும், இவர் முரளிகரன் (பிரான்ஸ்-00336.66289603) கிருபாகரன் (இந்தியா) ஆகியோரின் சகோதரரும் ஆவார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட தோழர், நண்பர்களாலும், கழகத் தோழர்களாலும் பிரபா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் 84களில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் பிரபா அவர்கள், கழகத்தில் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றதுடன், கழகம் முன்னெடுத்த மக்கள் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் களத்தில் 1987ம் ஆண்டு வரை செயலாற்றி வந்தார்.
ஒரு சிறந்த மக்கள் போராளியாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் பணியாற்றி வந்த தோழர் பிரபா, தமிழ் மக்களின் விடியலில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையடுத்து 1987ல் புலம்பெயர்ந்த தோழர் பிரபா, சுவிஸ் நாட்டில் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளை உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சுவிஸ் கிளையில் உறுப்பினராக செயற்பட்ட வேளைகளில் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது மனந்தளராது துணிச்சலுடன் கழக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
பின்பு பிரான்ஸ் நாட்டிற்குச் வந்து இங்கு வசித்து வந்த பிரபா, கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக தனது இறுதி மூச்சுவரை செயற்பட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் கழக அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், அண்மையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பி, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத் திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்.
இவருடைய திடீர் மறைவானது கழகத்திற்கும் அல்லல்ப்பட்டு நிற்கும் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற அதேவேளை, அவர் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுப்போம் என உறுதிபூண்டு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்.
பார்வைக்கு வைக்கும் இடம்: 12.11.2009 வியாழக்கிழமை அன்று காலை 11.00 - 11.30
Institut Médico Légal de Paris 2, Place Mazas, 75012 PARIS, Métro : Quai de la Râpée தகனம் செய்யுமிடம் : 12.11.2009 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 14.10 - 15.10
Place Gambetta 71, rue des Rondetta, 75020 PARIS, Métro : Gambettaதெடர்புகளிற்கு: சகோதரன்.. (0033) 06 66 28 96 03 (0033) 06 66 28 96 03, தோழர்கள்.. (0033) 06 28 70 48 59 (0033) 06 28 70 48 59 // (0033) 06 50 27 24 72 (0033) 06 50 27 24 72
-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட் பிரான்ஸ் கிளை