திரு.முருகேசு முத்துக்குமார் (பிறப்பு : 25 சனவரி 1934 — இறப்பு : 2 பெப்ரவரி 2010) புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு முத்துக்குமார் அவர்கள் 02.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், தில்லைஈசன்(ஜேர்மனி), உதயமலர், விஜயமலர்(இலண்டன்) ஆகியோரின் தந்தையாரும், தர்மராசா, வரதராசன்(இலண்டன்), சந்திரகாந்தி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்லத்துரை(இலண்டன்), காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், சின்னத்தம்பி மற்றும் ராமலிங்கம்(முன்னாள் யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலய அதிபர், டென்மார்க்), காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் சகோதரனும்,
தர்மலிங்கம், இரத்தினம், யோகலிங்கம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்
திவ்வியா, சதுர்யா(ஜேர்மனி), லவ்சியா, சுவிதா(இலண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஈசன்(ஜேர்மனி)
தொடர்புகளுக்கு
வரதராசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086449310
ஈசன் — ஜெர்மனி
தொலைபேசி: +497115781152
தர்மராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442086402859


வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய காணி உத்தியோகத்தரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேங்கடம் பருவதவர்தனி தம்பதியரின் மகனும் திருமதி. பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், திரு. மனோகரன் (டென்மார்க்), திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. வினோதினி இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற திரு.பிரபாகரன் (தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (09.01.2010)சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்ஷலிக்காக வைக்கப்பட்டு, நாளை (10.01.2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். தகவல்: வல்வை மக்கள் ஒன்றியம்

